திபெத்தில் பாரம்பரிய திருவிழாவையொட்டி பிரம்மாண்ட புத்தர் ஓவியம் - நூதன நடன நிகழ்ச்சிகளில் ஏராளமானோர் பங்கேற்பு
Aug 26 2014 12:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திபெத்தின் பாரம்பரிய ஷோடன் திருவிழா கொண்டாட்டத்தில், புத்தர் உருவத்தை சித்தரிக்கும் பிரமாண்ட தாங்கா ஓவியம், காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
திபெத்தின் பாரம்பரிய கோடைகாலத் திருவிழாவான ஷோடன் திருவிழா, ஒவ்வொரு ஆண்டும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 16-வது நூற்றாண்டில் தொடங்கிய இந்த திருவிழா, திபெத்தின் பாரம்பரிய மற்றும் பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த ஆண்டுக்கான ஷோடன் திருவிழா நேற்று தொடங்கியது. இதன் சிறப்பு அம்சமாக, ட்ரெபுங் மலைக் கோயிலில், உருவாக்கப்பட்ட புத்தர் உருவம் பொறித்த பிரமாண்ட தாங்கா ஓவியம் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதைக்காண ஆயிரக்கணக்கான உள்ளூர் மக்களுடன் ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் ஆர்வமுடன் வருகை தருகின்றனர். மேலும், வித்தியாசமான முகமூடி அணிந்து, இசைக்கேற்றபடி நடனமாடும் அந்நாட்டின் பாரம்பரிய நடனம், பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.