தைவானில் எரிவாயு கசிவால் ஏற்பட்ட வெடிவிபத்து - 24 பேர் பலி - இருநூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம்

Aug 1 2014 12:55PM
எழுத்தின் அளவு: அ + அ -

தைவானில் எரிவாயு குழாய் வெடித்த தொடர் விபத்துகளில் பலியானோர் எண்ணிக்கை 24-ஆக அதிகரித்துள்ளது.

தைவான் நாட்டின் தெற்கு பகுதியான KAOHSIUNG நகரில் நேற்று, பூமிக்கடியில் குழாய்கள் மூலம் குடியிருப்புகளுக்கு வினியோகம் செய்யப்படும் சமையல் எரிவாயு குழாயில் கசிவு ஏற்பட்டது. இதனால் அந்த குழாய் பல இடங்களில் வெடித்துச் சிதறியது. பயங்கர சத்தத்துடன் நேரிட்ட விபத்தில், 24 பேர் உயிரிழந்தனர். குழந்தைகள் உட்பட இருநூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கரும்புகையுடன் கொழுந்துவிட்டு எரிந்த தீயை, தீயணைப்புத்துறையினர் போராடி கட்டுக்குள் கொண்டுவந்தனர். வெடிவிபத்து காரணமாக சாலையில் நீண்ட தூரத்திற்கு பெரும் பள்ளம் ஏற்பட்டதோடு, அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் தூக்கி எறியப்பட்டன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00