சிரியாவில், ISIS தீவிரவாதிகளின் நிலைகள் மீது வான்வழி தாக்குதலை தீவிரப்படுத்தியது அமெரிக்கா - பயங்கரவாதிகளின் வசமிருந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மீது குண்டுவீச்சு - 20 பேர் பலி
Sep 25 2014 6:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சிரியாவில் உள்ள ISIS தீவிரவாதிகளின் நிலைகள் மீது வான்வழி தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள அமெரிக்கா இன்று தீவிரவாதிகளின் வசம் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளை குண்டு வீசி அழித்தது. இதில் 20 பேர் கொல்லப்பட்டனர்.
இஸ்லாமிய நாடு அமைக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வரும் ISIS தீவிரவாதிகள் ஈராக் மற்றும் சிரியாவில் பொதுமக்களையும், ராணுவத்தினரையும் தாக்கி வருகின்றனர். இவர்களை ஒடுக்க அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளும் வான்வழி தாக்குதலை தொடங்கியுள்ளன. சிரியாவில் உள்ள ISIS தீவிரவாதிகளின் நிலைகள் மீது அமெரிக்க போர் விமானங்கள் இன்று 4-வது நாளாக குண்டு வீசி தாக்குதல் நடத்தின. இதில், தீவிரவாதிகள் கைப்பற்றி வைத்திருந்த 4 எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் அழிக்கப்பட்டன. இந்த தாக்குதலில் 20 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவின் தாக்குதல் அதிகரிக்கலாம் என்ற அச்சத்தில் தீவிரவாதிகள் தாங்கள் பிடித்து வைத்திருந்த பிணைக் கைதிகளை விடுதலை செய்து வருகின்றனர்.