தென்கொரியாவில், இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் பலி - படுகாயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதி
Jul 24 2014 5:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தென்கொரியாவில், இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், ஒருவர் உயிரிழந்துள்ளார். பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தென்கொரிய தலைநகர் சியோலின் தென்கிழக்குப் பகுதியில் இந்த விபத்து நேரிட்டுள்ளது. உள்ளூர் பயணிகள் ரயில் ஒன்றும், சுற்றுலாப் பயணிகள் ரயில் ஒன்றும் டீபேக் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, ஒன்றோடு ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், சம்பவ இடத்திலேயே பயணி ஒருவர் உயிரிழந்தார். 70-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து தகவல் அறிந்த, சியோலின் டீபேக் பகுதி தீயணைப்புப் படை வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். காயம் அடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவர்களை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் ஒருசிலரின் நிலைமை கவலைக்கிடமைக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த விபத்து குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இருந்தபோதிலும், தென்கொரியாவில் சமீப காலங்களில் தரைவழிப் போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து போன்றவைகளில் அவ்வப்போது விபத்துகள் நேரிட்டு வருவதாகவும், பாதுகாப்பு குறித்து தங்களுக்கு அச்சமாக உள்ளதாகவும் அந்நாட்டு மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.