உலக மக்கள் தொகை இந்த நூற்றாண்டின் இறுதியில் ஆயிரத்து 100 கோடியை தாண்டும் : ஐ.நா. ஆய்வறிக்கையில் தகவல்
Sep 20 2014 1:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலக மக்கள் தொகை, இந்த நூற்றாண்டின் இறுதியில் ஆயிரத்து 100 கோடியை தாண்டும் என ஐ.நா. ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்ரிக்க நாடுகளில் குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகரித்து வருவதால், வரும் 2100-ம் ஆண்டில், உலக மக்கள் தொகை ஆயிரத்து 100 கோடியை தாண்டும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதைவிட 200 கோடி அதிகமாகும். இந்த நூற்றாண்டின் இறுதியில் ஆப்ரிக்க மக்கள் தொகை 510 கோடி வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் ஐ.நா. ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 440 கோடியாக உள்ள ஆசிய நாடுகளின் மக்கள் தொகை, 2050-ம் ஆண்டில் 500 கோடியாக உயர்ந்து, அதன் பிறகு சரியத் தொடங்கும் என ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.