பெரு நாட்டில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த போலீசாருக்கும், கிராம மக்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு
Apr 17 2014 4:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பெரு நாட்டில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த போலீசாருக்கும், கிராம மக்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.
இகுய்டோஸ் நகர பகுதியில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து தற்காலிக வீடுகளை அப்பகுதி மக்கள் அமைத்திருந்தனர். விளைநிலத்தில் கட்டப்பட்டிருந்த இந்த வீடுகளை, இடித்து தள்ள அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டதை தொடர்ந்து, போலீசார் உதவியுடன் ஜேசிபி இயந்திரங்கள் விரைந்தன. இதனை தடுக்கும் வகையில் அப்பகுதி மக்கள் கற்களையும், தடுப்பு வேலிகளில் வைத்திருந்த நீண்ட கம்புகளையும் போலீசார் மீது வீசியெறிந்து தாக்குதல் நடத்தினர். வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்த போலீசார், ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.