பெரு நாட்டில், சர்க்கஸ் நிகழ்ச்சிகளில் சட்டவிரோதமாக ஈடுபடுத்தப்பட்ட 3 சிங்கங்கள் - வனவிலங்கு பாதுகாப்பாளர்களால் மீட்பு
Aug 25 2014 12:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பெரு நாட்டில், சர்க்கஸ் நிகழ்ச்சிகளில் சட்டவிரோதமாக ஈடுபடுத்தப்பட்ட 3 சிங்கங்களை, வனவிலங்கு பாதுகாப்பாளர்கள் மீட்டுள்ளனர்.
வனவிலங்குகளை சர்க்கஸ் உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளில் பயன்படுத்துவதற்கு பல்வேறு நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பயன்படுத்தப்படும் விலங்குகள் மீட்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பெருவில், சர்க்கஸ் நிகழ்ச்சியில் சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்ட 3 சிங்கங்கள் மீட்கப்பட்டன. இங்கிலாந்தைச் சேர்ந்த அரசு சாரா சர்வதேச வனவிலங்கு பாதுகாப்பாளர்களால் மீட்கப்பட்டுள்ள இந்த சிங்கங்கள் பாதுகாப்பான இடங்களில் தற்போது வைக்கப்பட்டுள்ளன. இம்மாதத்தில் மட்டும் இதுவரை 9 சிங்கங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், இந்தப் பணி மிகவும் சவால் நிறைந்ததாக உள்ளதாகவும் அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.