ரமலான் பண்டிகை நெருங்கி வருவதையொட்டி பாகிஸ்தானின் கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது
Jul 24 2014 4:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ரமலான் பண்டிகை நெருங்கி வருவதையொட்டி, பாகிஸ்தானின் கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. பொதுமக்கள், தங்களுக்கு வேண்டிய பொருட்களை வாங்கிச் செல்வதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பாகிஸ்தானில், ரமலான் பண்டிகையைக் கொண்டாட இஸ்லாமிய மக்கள் தயாராகி வருகின்றனர். இதற்காக, தங்களுக்கு வேண்டிய பொருட்களை வாங்குவதில் அவர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். நகரப் பகுதிகளில் உள்ள மார்க்கெட் மற்றும் விற்பனை வளாகக் கட்டடங்களில் கூட்டம் அலைமோதுகிறது. பாகிஸ்தானின் வர்த்தகத் தலைநகரான கராச்சியில் உள்ள அனைத்து கடைகளிலும் கூட்டம் அலைமோதி வருகிறது. ஆண்கள், பெண்கள் என அனைவரும், தாங்கள் விரும்பியதை உற்சாகத்துடன் வாங்கி வருகின்றனர்.
பெண்கள், தங்களுக்கு உகந்த காலணிகள், வளையல்கள் உள்ளிட்ட அலங்காரப் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். இதற்கென்றே புதிய கடைகளும் ஆங்காங்கே முளைத்துள்ளன. எங்கு பார்த்தாலும் புதிய கடைகள் உருவாகியிருப்பதால், பொருட்களை வாங்கிச்செல்வதில் நேரம் போதவில்லை என்றே பொதுமக்கள் கூறுகின்றனர். வாகனங்கள் அனைத்தும் சாலைகளை அடைத்துக் கொண்டு மெதுவாகவே செல்ல வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இதனால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்ட போதிலும், வியாபாரம் சூடுபிடித்தே காணப்படுகிறது.
180 மில்லியன் ஜனத் தொகை கொண்ட பாகிஸ்தானில், 90 சதவீதம் இஸ்லாமியர்கள் வாழ்ந்து வருகின்றனர். இது ஒரு இஸ்லாமிய நாடாக இருப்பதால், புனித ரமலான் மாதக் கொண்டாட்டம் எப்போதுமே மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.