வடகொரியாவில் நடைபெற்ற 24-வது சர்வதேச குழந்தைகள் முகாமில் வெளிநாடுகளைச் சேர்ந்த ஏராளமான குழந்தைகள் ஆர்வமுடன் பங்கேற்பு
Jul 31 2014 4:36PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வடகொரியாவில் நடைபெற்ற 24-வது சர்வதேச குழந்தைகள் முகாமில் வெளிநாடுகளைச் சேர்ந்த ஏராளமான குழந்தைகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
வடகொரியாவின் கிழக்கு கடலோர நகரமான வோன்சானில் உள்ள சாங்டோவோன் சர்வதேச குழந்தைகள் முகாம், கடந்த 1960-ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த முகாமில்,ரஷ்யா, அயர்லாந்து, வியட்நாம் மற்றும் தான்சானியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த முகாம் அண்மையில் புதுப்பிக்கப்பட்டது. இதன் வெளிப்புற விளையாட்டு மைதானத்தில், உடற்பயிற்சிக்கூடம், உள்ளரங்க நீச்சல் குளம் மற்றும் நீர் பூங்கா என பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனையடுத்து, 24-வது சர்வதேச முகாமில் பங்கேற்ற குழந்தைகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த குழந்தைகள் முகாமிற்கு, அதிபர் கிம் ஜோங் உன் அண்மையில் வருகை தந்து பார்வையிட்டுச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.