மியான்மரில் புத்தாண்டு கொண்டாட்டம் – யான்கான் நகரில் பொதுமக்கள், ஒருவர் மீது ஒருவர் தண்ணீரை பீய்ச்சி அடித்து மகிழ்ச்சி ஆரவாரம்
Apr 14 2014 12:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மியான்மர் நாட்டின் புத்தாண்டை, அந்நாட்டு மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடினர். யான்கான் என்ற நகரில் குழுமிய மக்கள், ஒருவர் மீது ஒருவர் தண்ணீரை பீய்ச்சி அடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மியான்மரில் புத்தாண்டையொட்டி, தலைநகர் யான்கானில் உள்ள பிரசித்தி பெற்ற புத்தர் கோயிலில், சிறப்பு வழிபாடு நடைபெற்றது. புத்தர் சிலை மீது மக்கள் புனித நீரை ஊற்றி வழிபாடு நடத்தினர். அந்நாட்டின் பாரம்பரிய உடை அணிந்த ஏராளமானோர், வீதிகளில் நடனமாடி புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். பாவங்களை சலவை செய்து ஒரு புதிய தொடக்கத்தை அளிக்கும் வகையில், பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும், ஒருவர் மீது ஒருவர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தங்களது மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். தண்ணீர் துப்பாக்கிகள் மற்றும் வாளிகளில் நிரப்பப்பட்ட நீரை, வீதிகளில் சென்றவர்கள் மீது பீய்ச்சி அடித்து புத்தாண்டை கொண்டாடினர்.