மாயமான மலேசிய விமானம் - தேடும் பணியில் அதிநவீன நீர்மூழ்கி ரோபோ
Apr 15 2014 11:19AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னையைச் சேர்ந்த பெண் சந்திரிகா சர்மா உள்பட 239 பேருடன் மாயமான மலேசிய விமானத்தை, கடலுக்கடியில் தேடும் பணியில் புளூபின்-21 என்ற அதிநவீன நீர்மூழ்கி ரோபோ ஈடுபட்டுள்ளது.
எம்.ஹெச்.370 ரக மலேசிய ஏர்லைன்ஸ் விமானம், கோலாலம்பூரிலிருந்து, சீன தலைநகர் பெய்ஜிங் சென்ற வழியில் நடுவானில் மாயமானது. அந்த விமானம், இந்தியப் பெருங்கடலின் தென் பகுதியில் விழுந்து நொறுங்கியிருக்கக் கூடும் என்ற ரேடார் தகவலின் அடிப்படையில் விமானத்தைத் தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டன. விமானத்தின் கருப்புப் பெட்டியில் பொருத்தப்பட்டிருந்த பேட்டரியின் ஆயுட்காலம் முடிவடைந்து விட்ட நிலையில், விமானத்தின் சிதைவுகளைத் தேடும் பணியில் புளூபின்-21 என்ற அதிநவீன நீர்மூழ்கி ரோபோ களமிறக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோ, கடலுக்கடியில் 4 ஆயிரத்து 500 மீட்டர் ஆழத்தில் உள்ள தரைமட்டத்தில் சென்று, அடிமட்டப் பகுதியை படமெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.