ஜப்பானில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தனியாக வசித்து வந்த பள்ளி மாணவியை சக மாணவியே கொலை செய்த சம்பவத்தால் பெரும் அதிர்ச்சி

Jul 31 2014 12:43PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜப்பானில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தனியாக வசித்து வந்த பள்ளி மாணவியை, அவருடன் படித்த சக மாணவியே கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த 16 வயது பள்ளி மாணவி, இடதுகை துண்டிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்து கிடந்ததை பார்த்த அப்பகுதி மக்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இறந்த உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். உயிரிழந்த மாணவி படித்த பள்ளிக்கு சென்ற போலீசார், அங்குள்ள மாணவ, மாணவிகளிடையே விசாரணை நடத்தினர். அதில், அவருடன் படித்த சக மாணவியே மழுங்கலான கத்தியால் குத்தி இடது கையை துண்டித்து அந்த மாணவியை கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்த அந்த பள்ளியின் ஆசிரியர்கள், மாணவிகள் இருவரும் பல வருடங்களாக தோழிகளாக இருந்தவர்கள் என்றும் கொலைக்கான காரணம் தெரியவில்லை என்றும் கூறினர். இந்நிலையில், கொலைக்கு காரணமான மாணவியை கைது செய்துள்ள போலீசார், அவளிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை நடைபெற்ற விசாரணையில், கொலை நடந்த அன்றுதான், கைது செய்யப்பட்ட மாணவிக்கு பிறந்த நாள் என்றும் சிறிய பிரச்சினையில் ஆரம்பித்த சண்டை, கொலையில் முடிந்ததாகவும் தெரியவந்துள்ளது. கூடிய விரைவில், முழு விவரமும் வெளியிடப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00