ஆசிய விளையாட்டுப் போட்டி - படகுப் பந்தயம் மற்றும் துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு 3 வெண்கலப் பதக்கங்கள்
Sep 25 2014 4:09PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜப்பானில் உள்ள அறிவியல் கூடமொன்றில், குழந்தைகள் தீட்டும் பலவண்ண மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரின ஓவியங்கள், உயிர்பெற்று நீந்துவதைப் போல் நடைபெற்ற வீடியோ காட்சி அனைவரையும் கவர்ந்துள்ளன.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் புறநகர் பகுதியில் உள்ள ஆய்வுக் கூடம் ஒன்றில் மீன்கள், கடல் குதிரைகள் போன்ற கடல் வாழ் உயிரினங்கள் உருவத்தை தீட்டும் குழந்தைகளின் வரைபடங்கள் ஸ்கேன் செய்யப்படுகின்றன. பின்னர், அங்குள்ள திரைகளில், நிஜமான உயிரினங்களை போல தண்ணீரில் நீந்துகின்றன. தாங்கள் வண்ணம் தீட்டிய ஓவியங்கள் தங்களது கண்முன்னே உயிர்பெற்று உலவும் காட்சிகள், இளஞ்சிறார்களை எல்லையற்ற மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவற்றைத் தொட்டுப் பார்த்தும் அவர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். இந்த வித்தியாசமான படைப்புகள் குறித்து ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து ஏராளமானோர் தன்னிடம் விளக்கம் பெற விரும்புவதாக, இதனை உருவாக்கிய மாட்சுமோடோ தெரிவிக்கிறார்.