இஸ்ரேல் சிறையில், ஒருவர் மர்ம மரணம் - இறுதி ஊர்வலத்தின்போது, போலீசார் மீது தாக்குதல்

Sep 13 2014 11:08AM
எழுத்தின் அளவு: அ + அ -

இஸ்ரேல் சிறையில் இருந்த ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்தார். அவரது இறுதி ஊர்வலத்தின்போது, போலீசார் மீது, கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதால், வன்முறை வெடித்தது.

இஸ்ரேல் ராணுவத்திற்கும், பாலஸ்தீனர்களுக்கும் எல்லைப் பகுதியில் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது. ஹெப்ரான் பகுதியைச் சேர்ந்த Raed Al-Jabari என்பரை, இஸ்ரேலிய படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜபரி, சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரை சிறை அதிகாரிகள், அடித்துக் கொன்றதாக பாலஸ்தீனர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஆனால், அவர் சிறையில் தற்கொலை செய்து கொண்டதாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜபரின் இறுதி ஊர்வலம் நடைபெற்றபோது, அதில் பங்கேற்ற ஆயிரக்கணக்கானோர் வன்முறையில் ஈடுபட்டனர். போலீசார் மீது கற்கள் மற்றும் தீப்பந்தங்களை வீசியெறிந்தனர். இதனையடுத்து, போலீசார், கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தி ஆப்பாட்டக்காரர்களை விரட்டி அடித்தனர். இதனால் அப்பகுதி முழுவதும் போர்க்களம் போல் காட்சி அளித்தது. ஜபரி மர்மமான முறையில் மரணமடைந்தது குறித்து, நீதிமன்ற விசாரணை நடத்தப்படுகிறது. அவரது பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே, மரணத்திற்கான காரணம் தெரியவரும் என இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00