ஈராக் உள்நாட்டுப் போரில் முக்கிய திருப்பமாக, பாக்தாத் மாவட்டத்தை தீவிரவாதிகளின் பிடியில் இருந்து மீட்டுள்ளதாக ராணுவம் அறிவிப்பு
Jul 22 2014 12:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஈராக் உள்நாட்டுப் போரில் முக்கிய திருப்பமாக, பாக்தாத் மாவட்டத்தை தீவிரவாதிகளின் பிடியில் இருந்து மீட்டுள்ளதாக அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது.
ஈராக்கில் அந்நாட்டு ராணுவத்துக்கு எதிராக ISIS என்ற அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் தொடர்ந்து போரிட்டு வருகின்றனர். இந்த போரின்போது, பல முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ளதாக தீவிரவாதிகள் அறிவித்தனர். இந்த உள்நாட்டுப்போரில் ஏராளமானோர் உயிரிழந்தனர். ஈராக்கில் பணியாற்றிய இந்தியா உள்ளிட்ட வெளிடுநாடுகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் முக்கிய திருப்பமாக, ஈராக் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தி, பாக்தாத் மாவட்டத்தைதீவிரவாதிகளிடம் இருந்து மீட்டுள்ளதாக ஈராக் ராணுவ தகவல் தொடர்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் 55 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக அவர் கூறியுள்ளார். பொதுமக்கள் தரப்பிலும் உயிர்ச் சேதம் ஏற்பட்டது. பலர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.