தூக்குத் தண்டனையிலிருந்து உயிர் பிழைத்த ஈரான் வாலிபர் – மரத்தின் விளிம்பிலிருந்து தப்பிய அதிசயம்
Apr 18 2014 3:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூக்கு மேடையில் நின்ற ஈரானைச் சேர்ந்த வாலிபர், கருணையின் அடிப்படையில் உயிர் பிழைத்தது அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.
ஈரான் நாட்டின் ரோயான் நகரைச் சேர்ந்த பிலால், அப்துல்லாவை, கடந்த 2007-ம் ஆண்டு கத்தியால் குத்திக்கொன்றார். இதுதொடர்பான வழக்கில், பிலாலுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, தண்டனையை நிறைவேற்றுவதற்காக பிலாலை தூக்கு மேடைக்கு அழைத்துச் சென்றபோது, அப்துல்லாவின் தாய் சமீரா, குற்றவாளியின் கன்னத்தில் அறைந்துவிட்டு, அவரை மன்னித்துவிட்டதாகத் தெரிவித்தார். இதன் காரணமாக, மரணத்தின் விளிம்பில் இருந்து பிலால் தப்பித்தார். அரபு நாடுகளில் கொலை குற்றவாளிக்கு, கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர் மன்னிப்பு வழங்கினால் தண்டனையில் இருந்து தப்பிவிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது. பல ஆண்டுகளுக்குப் பிறகு இத்தகைய சம்பவம் நடைபெற்றது ஈரான் மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.