ஹாங்காங்கில் ஜனநாயக முறையிலான அரசை நிறுவ வலியுறுத்தி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் - காவல்துறையினர் தடுத்ததால் மோதல்
Sep 27 2014 12:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங் நகரத்தில் ஜனநாயக முறையிலான அரசை நிறுவ வேண்டுமென வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை காவல்துறையினர் தடுத்ததால், மோதல் ஏற்பட்டது.
ஹாங்காங் பகுதி சீனாவின் கட்டுப்பாட்டிற்குள் வந்ததைத் தொடர்ந்து, அந்த பகுதியில் சீன அரசு தனது ஆதிக்கத்தை வலுப்படுத்தி வருகிறது. இதற்கு எதிராக ஹாங்காங்கில் பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்நிலையில், ஹாங்காங் நகரில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஜனநாயக முறையிலான அரசை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஹாங்காங் அரசு அலுவலகத்தை முற்றுகையிட்டு போரட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றியதால், மாணவர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.