கிரீஸ் நாட்டில் மிகப்பழமை வாய்ந்த கல்லறையின் முகப்பு - சீரமைப்பு பணிகளுக்கு பின்னர் மீண்டும் திறப்பு
Aug 26 2014 5:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கிரீஸ் நாட்டில் மிகப்பழமை வாய்ந்த கல்லறையின் முகப்பு, சீரமைப்பு பணிகளுக்கு பின்னர், சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்காக மீண்டும் திறக்கப்பட்டது.
கிரேக்க நாட்டை மாமன்னன் அலெக்சாண்டர் ஆண்ட, கிறிஸ்து பிறப்புக்கு 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த, அந்நாட்டின் வடக்கு பகுதியில் தொல்லியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டபோது, பூமிக்கு அடியில் மிகப் பிரம்மாண்டமான கல்லறை இருப்பது தெரியவந்தது. இதன் வாசலில் சுமார் 5 அடி உயரமும், ஒன்றரை டன் எடையும் கொண்ட இரு, தலை மற்றும் இறக்கை இல்லாத யாழி எனப்படும் மிகப்பெரிய சிற்பங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அலெக்சாண்டரின் மனைவி ரொக்ஷானா மற்றும் மகனும் இந்த இடத்தில் புதைக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த கல்லறையின் முகப்பு மிகவும் சிதிலமடைந்திருந்த நிலையில், தற்போது அங்கு சீரமைப்பு பணிகள் முடிவடைந்து சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளது.