இங்கிலாந்தில் நாய்கள் காப்பகம் தீவைத்து எரிக்கப்பட்டதில் 60 நாய்கள் உயிரிழந்தன : இச்சம்பவம் தொடர்பாக 15 வயது சிறுவன் கைது

Sep 16 2014 12:05PM
எழுத்தின் அளவு: அ + அ -

இங்கிலாந்து நாட்டில் நாய்கள் காப்பகம் தீவைத்து எரிக்கப்பட்டதில், 60 நாய்கள் உயிரிழந்தன. இந்த சம்பவம் தொடர்பாக 15 வயது சிறுவனை கைது செய்துள்ள போலீசார், அவனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் நகரில் இயங்கி வரும் நாய்கள் காப்பகத்தில் பல்வேறு விதமான நாய்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், இங்கு வளர்க்கப்படும் நாய்கள் மர்மமான முறையில் உயிரிழந்தன. இந்த நாய்கள் அனைத்துமே தீ விபத்துக் காரணமாக உயிரிழந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி வந்த போலீசார், மொத்தம் 60 நாய்கள் கொல்லப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தனர். இதற்கிடையே விசாரணையை துரிதப்படுத்திய போலீசார் சந்தேகத்தின் பேரில் 15 வயது சிறுவனை கைது செய்தனர். அந்த நபரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. உரியநேரத்தில் காப்பகத்திற்கு தீ வைத்த சிறுவன் கைது செய்யப்பட்டதால் மேலும் 150 நாய்கள் உயிர்தப்பின. இந்த நிலையில் அங்கு 5 கோடி ரூபாய் செலவில் மேலும் ஒரு நாய்கள் காப்பகம் கட்ட ஒரு சமூக சேவை நிறுவனம் முடிவு செய்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00