சீன தேசிய நெடுஞ்சாலையில் நேரிட்ட கோர விபத்து - டிரக் வாகனத்துடன் பேருந்து மோதியதில் 15 பேர் பலி
Aug 27 2014 4:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீன தேசிய நெடுஞ்சாலையில் டிரக் வாகனத்துடன், பேருந்து மோதிய விபத்தில் 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சீனாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள மாகாணத்தில் தேசிய நெடுஞ்சாலையில் 61 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பேருந்து திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் வந்த டிரக் வாகனத்துடன் பயங்கரமாக மோதியது. இதில் பேருந்தில் இருந்த 13-ம் பேரும், டிரக்கில் இருந்த 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து பகுதிக்கு விரைந்த மீட்புப் படையினர், காயமடைந்த 48 பேரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.