நிலநடுக்கத்தால் பூமியைவிட்டு வெளியே வந்த மம்மிகள் - சிலி நாட்டில் பரபரப்பு
Apr 12 2014 12:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நிலநடுக்கம் பாதித்த சிலி நாட்டில், மண்ணில் புதைந்திருந்த மம்மிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சிலி நாட்டில் கடந்த 2-ம் தேதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் நேரிட்டது. இதில் 6 பேர் உயிரிழந்த நிலையில், அந்நாட்டின் வடக்கு பகுதியில், சுமார் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த மம்மிகள் புதைக்கப்பட்ட இடத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக கல்லறைகள் உடைந்ததால், மம்மிகள் இடம் பெயர்ந்ததாகவும், அதில் பூசப்பட்டிருந்த ஒரு வகை களிமண் கரைந்துவிட்டதால், மம்மிகள் பாதிப்படைந்திருப்பதாகவும் தொல்லியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.