ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே 2 கார்களில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் 18 பேர் பலி - 50க்கும் மேற்பட்டோர் காயம்
Sep 2 2014 5:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே 2 கார்களில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் 18 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
பாக்தாத்தில், அல்-அமில் மாவட்டத்தில் ஷியா பிரிவினர் அதிகம் வசிக்கும் பகுதியில், இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த 2 கார்களில் தீவிரவாதிகள் வெடிகுண்டை வைத்து வெடிக்கச் செய்துள்ளனர். ஈராக் மற்றும் சிரியாவில் குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து வெடிகுண்டு தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். பாக்தாத்தை நோக்கி முன்னேறிச் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும், அவர்கள் அவ்வப்போது மிரட்டல் விடுத்துள்ளனர். இந்நிலையில், இரு கார்களில் வைக்கப்பட்டிருந்த குண்டுவெடிப்பில் 18 பேர் கொல்லப்பட்ட சம்பவம், பதற்றத்தை அதிகரித்துள்ளது. கடந்த மாதத்தில் மட்டும் ஈராக் முழுவதும் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 1,420 பேர் உயிரிழந்திருப்பதாக ஐ.நா. வெளியிட்ட தகவல் தெரிவிக்கிறது.