ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளை அழிக்க ஈராக் மற்றும் சிரியாவிலும் விமானத் தாக்குதல் நடத்தப்போவதாக அமெரிக்கா அறிவிப்பு - ரஷ்யா எதிர்ப்பு

Sep 12 2014 4:46PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளை அழிக்க ஈராக் மற்றும் சிரியாவிலும் விமானத் தாக்குதல் நடத்தப்போவதாக அமெரிக்கா அறிவித்திருப்பதற்கு, ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள், அமெரிக்க பத்திரிகையாளர் இருவரின் தலைகளைத் துண்டித்து, கொலை செய்ததையடுத்து, நேற்று தொலைக்காட்சியில் உரையாற்றிய அதிபர் ஒபாமா, ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளை அழிக்க ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள அவர்களது தளங்களின் மீது விமானத்தாக்குதல் நடத்தப்போவதாகவும், அந்நாடுகளில் மக்கள் ஜனநாயக அரசுகளை நிறுவப்போவதாகவும் அறிவித்தார். இது குறித்து, மாஸ்கோவில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ரஷ்ய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் Alexander Lukashevich, மேற்காசியாவில் தீவிரவாத இயக்கங்களை வளர்ப்பது, அதன் மூலம் அந்நாட்டு அரசுகளை கவிழ்ப்பது, பிறகு தீவிரவாத இயக்கங்களை அழிப்பது என்னும் போர்வையில், அந்நாட்டிற்குள் நுழைவது ஆகிய செயல்களை அமெரிக்கா தொடர்ந்து நடத்தி வருவதாகத் தெரிவித்தார். அதேபோக்கை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின்மீதும் அமெரிக்கா கடைபிடிக்கத் தொடங்கியுள்ளது என்று தெரிவித்த Alexander Lukashevich, ஐக்கிய நாடுகள் சபையின் அனுமதியின்றி, அமெரிக்கா பிற நாடுகளுக்குள் நுழைவது, சர்வதேச விதிகளுக்கு முரணானது என்றும், அதனை ரஷ்யா கடுமையாக எதிர்க்கும் என்றும் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00