நோபல் பரிசை வென்ற எழுத்தாளர் எர்னஸ்ட் ஹெமிங்வேயின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் அமெரிக்காவில் கோலாகலமாக நடைபெற்றது
Jul 22 2014 1:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நோபல் பரிசை வென்ற எழுத்தாளர் எர்னஸ்ட் ஹெமிங்வேயின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் அமெரிக்காவில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் வழக்கம்போலவே அவரைப் போன்று வேடமணிந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு விழாவை உற்சாகப்படுத்தினர்.
அமெரிக்க எழுத்தாளரான எர்னஸ்ட் ஹெமிங்வே, தனது தனித்துவமான எழுத்து நடை, மிகக் குறைந்த அளவிலேயே சொற்களை பயன்படுத்துவது, 20-ம் நூற்றாண்டின் புனைக்கதை இலக்கியத்தைப் பயன்படுத்தியது போன்ற செயல்களால் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார். இவரது பெரும்பாலான இலக்கியப் பங்களிப்புகள் 1920-ம் ஆண்டிலிருந்து 1950-வரை எழுதப்பட்டதாகும். ஹெமிங்வேயின் கதாபாத்திரங்களின் தனித்துவமான கட்டமைப்பு, வாசகர்களால் மிகவும் ரசிக்கப்பட்டது. இதில் The Old Man and the Sea என்ற நாவல், இலக்கியத்துக்கான நோபல் பரிசை தட்டிச்சென்றது.
இந்நிலையில், எர்னஸ்ட் ஹெமிங்வேயின் பிறந்தநாள் விழா ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ப்ளோரிடாவில் நடைபெற்ற விழாவில், அவரைப் போன்று வேடமணிந்த 130 பேர் கலந்துகொண்டனர். ஹெமிங்வே போன்றே வேடமணிந்தவர்களுக்கு இடையே நடத்தப்பட்ட போட்டியில், அரிசோனா மாகாணத்தைச் சேர்ந்த 68 வயது முதியவர் வெற்றி பெற்று பதக்கத்தை பெற்றுக்கொண்டார். இந்த விழாவில் அனைவரும் ஒன்றுகூடி ஹெமிங்வே-யிற்கு தங்களது உற்சாகமான பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர். அத்துடன் அங்கு கூடியிருந்த பொதுமக்களிடையே அவர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்ட நிகழ்வு அனைவரிடையே பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியது.