சிரியாவில் ISIS தீவிரவாதிகளின் முகாம்கள் மீது அமெரிக்கா மற்றும் நேச நாடுகள் கூட்டு நடவடிக்கை தொடக்கம் - அதிநவீன டோமோஹாக் ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதல்
Sep 23 2014 12:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சிரியாவில் ISIS தீவிரவாதிகளின் மறைவிடங்கள் மீது அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகள் கூட்டாக ஏவுகணை தாக்குதல்களை தொடங்கியுள்ளன.
இஸ்லாமிய நாடு ஒன்றை உருவாக்கும் நோக்கத்துடன் ISIS தீவிரவாதிகள் சிரியாவிலும், ஈராக்கிலும் பொதுமக்கள் மற்றும் ராணுவத்தினர் மீது கடுமையாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனை தாக்குப்பிடிக்க முடியாமல் சிரியாவிலிருந்து ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் எல்லையைக் கடந்து துருக்கியில் தஞ்சமைடந்துள்ளனர். இந்நிலையில், ISIS தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக அமெரிக்கா அதன் நட்பு நாடுகளுடன் இணைந்து ஏவுகணைத் தாக்குதல்களை தொடங்கியுள்ளது. இதில், Tomohawk என்ற அதிநவீன ஏவுகணைகள் பயன்படுத்தப்படுகின்றன. சிரியாவின் மீது நடத்தப்படும் இந்த தாக்குதல் சட்டப்பூர்வமானதுதான் என்று ஃபிரான்ஸ் தெரிவித்துள்ளது. சிரியாவில் இருந்து அகதிகள் வருகை அதிகரித்துள்ளதால் துருக்கி நாடு சிரியாவையொட்டியுள்ள அதன் எல்லையை திறந்துவிட்டுள்ளது.