கொலம்பியாவில் ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் போராளிகள் குழுவைச் சேர்ந்த 13 பேர் கொல்லப்பட்டனர் - ஏராளமான ஆயுதங்கள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல்
Jul 25 2014 12:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொலம்பியாவில் ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில், இரண்டு போராளிகள் குழுவைச் சேர்ந்த 13 பேர் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர். அவர்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கொலம்பியாவில் இரு வேறு இடங்களில் ராணுவம் நடத்திய தாக்குதலில் 13 இடதுசாரி கொரில்லா போராளிகள் பலியானதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
அராக்கா கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற ராணுவ தாக்குதலில் எட்டு இ.எல்.என்.கொரில்லா போராளிகள் கொல்லப்பட்டனர். அதே போல் மேடா மத்திய மாகாணத்தில் நடைபெற்ற ராணுவ தாக்குதலில் ஐந்து FARC கொரில்லா போராளிகள் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு துறையின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார். அந்த இரண்டு பகுதிகளையும் ராணுவம் கைப்பற்றும்போது பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது. அந்நாட்டு ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பொதுமக்கள், சாலைகள், எண்ணெய் கட்டமைப்பு மீது தாக்குதல் நடத்திய இ.எல்.என் போராளிகள் முகாமிட்டுள்ள அராக்காவில் நடத்தப்பட்ட தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவங்களில் பலர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் கொரில்லாக்கள் பயன்படுத்தி வந்த அதிநவீன ஆயுதங்கள் மற்றும் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் வலுக்கட்டாயமாக போராளிகள் இயக்கத்தில் சேர்க்கப்பட்டிருந்த சிறுவர்கள் மீட்கப்பட்டு சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். போராளிகள் மீதான தாக்குதல் உறுதி செய்துள்ள, அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சரான ஜுவன் கார்லோஸ் பின்சன் அந்த பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.