பிரேசில் 60,000 கண்ணாடி பாட்டில்களை கொண்டு அழகிய வீடு : சுற்றுச்சூழல் மாசை தடுக்க பெண்ணின் முயற்சி
Nov 21 2019 10:30AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிரேசில் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்ணாடி பாட்டில்களை கொண்டு அழகிய வீடு ஒன்றை கட்டியெழுப்பியுள்ளார்.
பிரேசில் நாட்டில் உள்ள சா பாலோ மாகாணத்தில், இடாவ்கா என்ற பகுதியை சேர்ந்தவர் இவோன் மார்டின். இவர் பொது வெளி மற்றும் தான் வசிக்கும் சுற்றுப்புறத்தில் ஏராளமான கண்ணாடி பாட்டில்கள் குப்பைகளாக குவிந்து கிடப்பதை பார்த்து மன வேதனை அடைந்துள்ளார். இதையடுத்து சுற்றுச்சூழல் மாசு அடைவதை தடுக்கும் விதமாக மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என எண்ணிய அவர், கண்ணாடி பாட்டில்களை சேகரித்து வந்து சிமெண்ட் பூச்சுடன் அழகிய வீடு ஒன்றை கட்டியுள்ளார். 3 மீட்டர் உயரம், 9 மீட்டர் அகலம், 8 மீட்டர் நீளம் கொண்ட வீட்டில், படுக்கையறை, சமையலறை, கழிவறையும் உள்ளன. மிக குறைந்த செலவிலேயே 60 ஆயிரம் கண்ணாடி பாட்டில்களை கொண்டு வீட்டை கட்டியதாகவும், வீடு கட்ட பாட்டில்களை பயன்படுத்தியதால் சுற்றுச்சூழல் கெடுவது தடுக்கப்பட்டிருப்பதாகவும் அப்பெண் தெரிவித்துள்ளார்.