இந்தியா-பாகிஸ்தான் நாடுகளிடையே மோதல் அதிகரிப்பது நல்லதல்ல : பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைகளுக்குத் தீர்வு காணலாம் - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்
Feb 28 2019 6:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியா-பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளிடமும் அணு ஆயுதங்கள் இருப்பதால், இவ்விரு நாடுகளிடையே மோதல் அதிகரிப்பது நல்லதல்ல என்றும், பேச்சுவார்த்தை மூலம், பிரச்னைகளுக்குத் தீர்வு காணலாம் என்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் பயங்ரவாதச் செயல்கள் தொடர்பாக, இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்பட்டு, போர்ச் சூழல் உருவாகி வரும் நிலையில், பாகிஸ்தான் தொலைக்காட்சி மற்றும் வானொலி மூலம் அந்நாட்டு மக்களுக்கு உரையாற்றிய, பிரதமர் இம்ரான்கான், இந்திய விமானப்படையின் 2 MIG ரக விமானங்களை தாங்கள் சுட்டு வீழ்த்தியதாகவும், இவ்விரு விமானங்களின் பைலட்டுகளை கைது செய்திருப்பதாகவும் தெரிவித்தார். போர் மூண்டால் நிலைமை கட்டுக்கடங்காமல் போய்விடும் எனவே இருநாடுகளிடையேயான பிரச்னையை பேச்சுவார்த்தை மூலம் சுமூகமாக தீர்த்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார். இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பான புலன்விசாரணையில் இந்தியாவுக்கு ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதாக பாகிஸ்தான் ஏற்கெனவே தெரிவித்துள்ளது என்றும் இம்ரான்கான் தெரிவித்தார்.