பிரிட்டனில் 40 வயது முதல் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி : பொதுமக்கள் பெருமளவில் ஆர்வம்
Apr 14 2021 1:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிரிட்டனில் 40 வயது முதல் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கின. கொரோனா தடுப்பூசி போட பொதுமக்கள் பெருமளவில் ஆர்வம் காட்டிவருவதாகவும் பிரிட்டன் அறிவித்துள்ளது.
இங்கிலாந்து அரசு ஏற்கெனவே திட்டமிட்டபடி இம்மாதம் 15ம் தேதிக்கு முன்னராக 50 வயதுக்கு மேல் அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணிகள் நிறைவடைந்ததாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதே போல் கொரோனா பாதிப்பு ஆபத்து அதிகம் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணிகள் நிறைவடைந்துள்ளன. மேலும், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட இணையதளத்தில் பதிவுகள் தொடங்கியவுடன் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான பொதுமக்கள் பதிவு செய்தனர். தற்போதைய நிலையில் வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தில் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போடப் பதிவு செய்துகொள்ளத் தொடங்கியுள்ளனர். இருப்பினும், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் மீண்டும் நோய் பாதிப்பு அதிகரிக்கும் ஆபத்து உள்ளதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரித்துள்ளார்.