கருத்தரித்தலில் ஆண்களின் பங்கு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி : கின்னஸ், இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்டில் இடம்பிடித்து கோவைச் சேர்ந்த மருத்துவர் சாதனை
Jan 9 2020 6:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கருத்தரித்தல் தொடர்பாக ஆண்களின் பங்கு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏறபடுத்தியதற்காக கோவைச் சேர்ந்த மருத்துவர் அரவிந்த் சந்தர் என்பவர் கின்னஸ் மற்றும் இந்தியன் புக் ஆப் ரெக்கார்டில் இடம் பிடித்துள்ளார்.
கோவையைச் சேர்ந்த மருத்துவர் அரவிந்த்சந்தர், ஐஸ்வர்யா கருத்தரிப்பு மருத்துவமனையில் முதன்மை மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக கோவையில் கருத்தரித்தலில் ஆண்களுக்கான பங்கு குறித்து மாபெரும் விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சியை நடத்தினார். ஆண்களுக்கென நடந்த இந்த விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர். கருத்தரித்தல் தொடர்பாக ஆண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை இதுவரை யாரும் நடத்தியதில்லை என்பதால், இதனை அங்கீகரித்து பாராட்டி கின்னஸ் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்டிலும் இந்த நிகழ்வு இடம் பிடித்துள்ளது.