தூத்துக்குடி மாவட்டத்தில் ஆட்டுக் குட்டிகளுக்கு பாலூட்டி வளர்க்கும் நாய் - தாய்ப்பாசத்திற்கு பேதமில்லை என்பது நிரூபணம்
Jan 9 2020 5:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தாயை இழந்து தவிக்கும் ஆட்டுக்குட்டிகளுக்கு பாலூட்டி வளர்க்கும் நாயின் பாசம் காண்போரை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் புதூர் பாண்டியாபுரத்தினை சேர்ந்தவர் திரு.காசி. இவர் தனது வீட்டில் ஆடுகள் மற்றும் நாய் ஒன்றையும் வளர்த்து வருகிறார். அவற்றில் ஒரு ஆடு, 5 குட்டிகளை ஈன்ற பின் இறந்துவிட்டது. இதனால் குட்டிகள் அனைத்தும் தாயின் ஆதரவு இன்றி தவிக்கும் நிலை ஏற்பட்டது. இதைப் பார்த்த காசியின் நாய், ஆட்டுக் குட்டிகளுக்கு பாலூட்டி தாய் போல் இருந்து வருகிறது. மேலும் ஆடுகள் மேய்ச்சலுக்குச் செல்லும் போது உடன் சென்று பாதுகாப்பிலும் ஈடுபடுகிறது. ஐந்தறிவு உயிர்களிடத்தில் காணப்படும் இந்த பேதமில்லாத அன்பு அனைவரிடமும் ஆச்சர்யத்தையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.