ஒரே இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் வகைகள் சாகுபடி - இயற்கை விவசாயம் மூலம் சாதனை படைக்கும் காரைக்கால் விவசாயி
Jan 9 2020 1:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காரைக்கால் அருகே இயற்கை விவசாயம் மூலம் 100க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் வகைகளை ஒரே இடத்தில் சாகுபடி செய்து விவசாயி ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
பாஸ்கர் என்ற விவசாயி வரிச்சிகுடி பகுதியிலுள்ள தனது நிலத்தில் கள்ளி மடையான், காட்டு சம்பா, சிறு மணிசம்பா, சண்டிகார், மடு முழுங்கி, மாப்பிள்ளை சம்பா, சீரகசம்பா , காட்டு யானம், கல்லுண்டை சம்பா , சேலம் சம்பா, மஞ்சள் பொன்னி , வைகறை சம்பா உட்பட 100க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் பயிர் வகைகளை பயிரிட்டுள்ளார். அதில் தற்போது பெரும்பாலானவை அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. இயற்கை முறையில் விளைவிக்கப்படும் பயிர்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளதால் அவற்றை சந்தைப்படுத்துவது எளிமையாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.