குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை ஆதரித்ததன் மூலம் தமிழர்களுக்கு அ.தி.மு.க அரசு மிகப்பெரிய துரோகம் - மார்க்சிஸ்ட் எம்.பி. குற்றச்சாட்டு
Dec 14 2019 6:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு ஆதரவு அளித்ததன் மூலம், தமிழர்களுக்கும், நாட்டுக்கும் அ.தி.மு.க அரசு மிகப்பெரிய துரோகத்தை செய்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சு.வெங்கடேசன் குற்றம் சாட்டியுள்ளார்.
தேசிய குடியுரிமை சட்டத்தை நிறைவேற்றிய மத்திய அரசை கண்டித்தும், மசோதாவை ஆதரித்த அ.தி.மு.க அரசுக்கு எதிராகவும், மதுரை தெற்குவாசல் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் எம்.பி. திரு.வெங்கடேசன், குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை திரும்பப்பெறும் வரை எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து போராடும் எனத் தெரிவித்தார்.