சுற்றுலா மையம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சி - தமிழகத்திலேயே முதன் முறையாக ஒருநாள் சுற்றுலா திட்டம் கோவையில் தொடக்கம்
Dec 14 2019 5:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோவையில் சுற்றுலா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழகத்திலேயே முதன் முறையாக ஒருநாள் சுற்றுலா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சுற்றுலா மையங்கள் அதிகம் இருக்கும் பகுதியாக கோவை மாவட்டம் திகழ்ந்து வருகிறது. இதனால் நாள்தோறும் வெளி மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் கோவையை நோக்கி வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே கோவையில் உள்ள சுற்றுலா மையம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையிலும் ஒருநாள் சுற்றுலா திட்டத்தை தமிழ்நாடு சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி காலை 7 மணிக்கு தொடங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்பயணம், குரங்கு அருவி, பாலாஜி கோவில், வால்பாறை மற்றும் ஆழியாறு உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை பார்த்த பின்னர் மீண்டும் இரவு 8 மணிக்கு கோவை வந்தடைகிறது. இதற்காக ஒரு நபருக்கு இரண்டு வேளை உணவு, நேநீருடன் ஆயிரத்து 100 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.