தூத்துக்குயில் மாற்றுத்திறனாளிகளுக்காக நடைபெற்ற சுயம்வரம் - சீர்வரிசையுடன் 9 ஜோடிகளுக்கு இலவச திருமணம்
Dec 14 2019 5:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குயில் சுயம்வரம் நடத்தி இணை சேர்ந்த 9 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு சீர்வரிசைகளுடன் இலவச திருமணம் நடைபெற்றது.
தூத்துக்குடியில் உள்ள லூசியா மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மையம் ஆண்டுதோறும் மாற்றுத்திறனாளிகளுக்கு சுயம்வரம் நடத்தி, அதன் மூலம் இணைகளை தேர்ந்தெடுக்கும் ஏழை மாற்று திறனாளி ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கிறது. அந்த வகையில், கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற சுயம்வரத்தில் இணை சேர்ந்த 9 ஜோடிகளுக்கு இன்று இலவசமாக கூட்டு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. லூசியா மறுவாழ்வு மையத்தில் வைத்து நடைபெற்ற இந்த திருமணத்தினை மறை மாவட்ட ஆயர் அருட்திரு. ஸ்டீபன் தலைமை ஏற்று நடத்தி வைத்தார்.