ராமநாதபுரத்தில் குடியிருப்பு பகுதியில் குவிக்கப்படும் மருத்துவ கழிவுகள் - மழை நீரோடு கலந்து சுகாதார சீர்கேடு ஏற்படும் ஆபத்து
Dec 14 2019 5:36PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராமநாதபுரத்தில் பொதுமக்கள் குடியிருக்கும் பகுதியில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் நோய் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஓம்சக்தி நகர் பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள 7வது தெருவில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில், அங்குள்ள காலி மனை ஒன்றில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. ஊசி போட பயன்படும் சிறிஞ்சுகள், மருந்து காலி பாட்டில்கள், பயன்படுத்தப்பட்ட பஞ்சுகள் போன்ற ஏராளமான மருத்துவக் கழிவுகள் அங்கு மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளன. மழை பெய்துவருவதால் மழை நீரோடு மருத்துவ கழிவுகள் கலந்து சுகாதாரக் கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு தரப்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டியுள்ள அப்பகுதி மக்கள், மாவட்ட ஆட்சியர் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.