புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு விழா : 650 காளைகளுக்கு மட்டும் டோக்கன் வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க ஜல்லிக்கட்டு கமிட்டியினர் கூட்டத்தில் முடிவு
Dec 14 2019 5:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புகழ்பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு குழு கூட்டத்தில், இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டில் 650 காளைகளுக்கு மட்டும் டோக்கன் வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் பாலமேட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 16-ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் குறித்து பாலமேடு ஜல்லிக்கட்டு கமிட்டி சார்பில் கூட்டம் நடைபெற்றது. வரும் ஜல்லிகட்டு போட்டியில் 650 காளைகள் மட்டுமே பங்கு பெற வேண்டும் எனவும், முதல் பரிசாக கார், இருசக்கர வாகனம் மற்றும் நாட்டு இன கறவை பசு மாடுகளை பரிசாக வழங்க ஆலோசிக்கப்பட்டது. அதிக காளைகளுக்கு டோக்கன் வழங்குவதால், போட்டியில் காளைகள் பங்கு பெறாமல் இருப்பது இதன் மூலம் தடுக்கப்படும் என்றும் ஜல்லிக்கட்டு கமிட்டியினர் தெரிவித்தனர்.