அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிறந்தநாள் கொண்டாட்டம் : காது கேளாத, வாய்பேச இயலாத மாணவர்களுக்கு அன்னதானம்
Dec 14 2019 5:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கழகப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரனின் பிறந்தநாளையொட்டி திருவண்ணாமலையில், காது கேளாத மற்றும் வாய் பேச இயலாத மாணவர்கள் 800 பேருக்கு, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
கழகப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரனின் பிறந்தநாளை முன்னிட்டு, திருவண்ணாமலையில் உள்ள காது கேளாதோர் பள்ளியில் பயிலும் 800 மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவு மற்றும் இரவு உணவு வழங்கி கழகத்தினர் கொண்டாடினர். தலைமை கழகப் பேச்சாளரும், மாவட்ட இளம்பெண்கள் பாசறை செயலாளர் திருமதி. சங்கீதா, திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலாளர் திரு. எஸ்.ஆர்.தர்மலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.