மயிலாடுதுறையில் மருத்துவக்கல்லூரி கட்டுமானப் பணிகளை உடனடியாக தொடங்க வலியுறுத்தி போராட்டம் - கடைகள் அடைப்பு : மீனவர்கள் வேலைநிறுத்தம்
Dec 12 2019 2:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் மருத்துவக்கல்லூரி கட்டுமானப் பணிகளை உடனடியாக தொடங்க வலியுறுத்தி, வணிகர்கள் முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இவற்றில் ஒரு கல்லூரியை நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் அமைக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இக்கோரிக்கையை வலியுறுத்தி இந்திய வர்த்தகர் தொழிற்குழுமம் சார்பில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில், மீனவர்களும் பங்கேற்றுள்ளனர். தனியார் பேருந்துகள், வாடகை வேன்கள், ஆட்டோக்கள் ஓடவில்லை.