பாசிப்பட்டினம் கடற்கரை பகுதியில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள கடல்வாழ் உயிரினங்கள் பறிமுதல்
Dec 12 2019 1:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இலங்கைக்கு கடத்துவதற்காக, பாசிப்பட்டினம் கடற்கரை அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அபூர்வ வகை கடல் பல்லிகள், கடல் குதிரைகள் போன்றவற்றை, வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, பாசிப்பட்டினத்தைச் சேர்ந்த சர்தார், முத்துராஜா, மன்னார்குடியைச் சேர்ந்த சக்திவேல் ஆகியோரை கைது செய்தனர். இருவரும் திருவாடானை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கடத்தலுக்காக கடல்வாழ் உயிரினங்கள் பதுக்கி வைக்கப்பட்டருந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.