சத்தியமங்கலத்தில் 2,000 வாழை மரங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள் : நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை
Dec 12 2019 1:42PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே, விவசாயத் தோட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள, 2 ஆயிரம் வாழை மரங்களை காட்டு யானைகள் சேதப்படுத்தி உள்ளதால், 3 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக, விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இதனால் அச்சமடைந்துள்ள விவசாயிகள், இது குறித்து வனத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.