நீலகிரி மாவட்டத்தில் சாலையின் குறுக்கே வாகனத்தை வழிமறித்த கரடி - அச்சத்தில் ஆழ்ந்தனர் சுற்றுலாப் பயணிகள்
Dec 12 2019 1:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே சுற்றுலா வாகனத்தை கரடி ஒன்று வழிமறித்ததால் அதில் பயணம் செய்த சுற்றுலாப் பயணிகள் அச்சமடைந்தனர்.
முதுமலை புலிகள் காப்பக சரணாலய பகுதியில் மசினகுடி மாயார் பகுதி உள்ளது. இங்கு வன விலங்குகளை காண நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். மசினகுடி - மாயார் சாலையில் சுற்றுலாப் பயணிகளின் கார் ஒன்று வந்துகொண்டிருந்தபோது, வன பகுதியிலிருந்து சாலைக்கு வந்த கரடி அந்தக் காரை வழி மறித்தது. அதனை சுற்றுலாப் பயணிகள் அச்சத்துடன் கண்டு ரசித்தனர். இந்தக் காட்சியை சுற்றுலாப் பயணி ஒருவர் செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். வன விலங்குகளை கண்டால் வாகனத்திலிருந்து இறங்கி புகைபடம் எடுக்க வேண்டாம் என சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.