பாலியல் குற்றங்கள் மீதான விசாரணையை தாமதப்படுத்தக்கூடாது : நடிகை ரோகிணி வலியுறுத்தல்
Dec 12 2019 11:43AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாலியல் குற்றங்கள் மீதான விசாரணையை தாமதப்படுத்தக்கூடாது எனவும், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் எனவும் நடிகை ரோகிணி வலியுறுத்தியுள்ளார். மகாகவி பாரதியாரின் பிறந்தநாளையொட்டி, விருதுநகர் மாவட்டம் சாத்தூரில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றபின் செய்தியாளர்களை சந்தித்த அவர், மதத்தின் அடிப்படையில், குடியுரிமையில் பாகுபாடு இருக்கக்கூடாது எனவும் தெரிவித்தார்.