தமிழகத்தில் ஊராட்சி தலைவர் பதவிகளை ஏலம் விடும் அவலம் தொடர்கிறது - தஞ்சை அருகே 32 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டு, 15-ம் தேதிக்குள் பணம் கட்ட கெடு விதிப்பு
Dec 12 2019 11:11AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தஞ்சை மாவட்டம், திருமங்கலக்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் பதவி, 32 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது. திருமங்கலக்கோட்டை தொண்டைமான் தெருவைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு. அதற்காக ரூபாய் 32 லட்சம் ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன் தொகையாக 2 லட்சம் ரூபாயை நாளை கட்டிவிட வேண்டும் என்றும், மீதமுள்ள 30 லட்சம் ரூபாயை வருகிற 15-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அவ்வாறு செலுத்த தவறினால் அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.