மதுரையில் பூக்கள் சந்தையில் பூக்களின் வரத்து குறைவு : விலை கடும் உயர்வு
Dec 12 2019 10:06AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பூக்கள் சந்தையில், பூக்களின் வரத்து குறைந்ததால், அதன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கனகாம்பரம் கிலோ 3 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகிறது. மல்லிகை, முல்லை, பன்னீர்ரோஸ் உள்ளிட்டவை ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. கார்த்திகை மாத பனிப்பொழிவால் பூக்களின் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். பூக்கள் விலை உயர்வால் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.