போடி மெட்டு மலைச்சாலையில் 8-வது கொண்டை ஊசி வளைவில் திடீர் மண் சரிவு : தோட்டத் தொழிலாளர்கள் பாதிப்பு
Dec 12 2019 10:02AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழக கேரள எல்லைப் பகுதியான தேனி மாவட்டம் போடி மெட்டு மலைச்சாலையில் உள்ள புலியூத்து 8 வது கொண்டை ஊசி வளைவில் திடீரென மண் மற்றும் பாறைச் சரிவு ஏற்பட்டது. போடிமெட்டு மலைச்சாலையில் சுமார் 5 மணி நேரத்திற்க்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக, வாகன ஓட்டிகள், தோட்டத் தொழலாளர்கள் சிரமத்திற்கு ஆளாகினர். இதையடுத்து தேசிய நெடுஞ்சாலைதுறையினர் பொக்லைன் மூலம் மண்சரிவை சரி செய்யும் பணிகளில் ஈடுபட்டனர்.