டெல்லியில் வாய் மூடி கிடக்கும் தமிழக எம்.பி.க்கள் - மாநிலத்திற்கு எந்த பலனும் இல்லை என பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி விமர்சனம்
Dec 8 2019 6:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழக எம்.பி.க்கள் டெல்லியில் வாய் மூடி கிடப்பதாகவும், அவர்களால் மாநிலத்திற்கு எந்த பலனும் இல்லை என்றும் பா.ஜ.க. மூத்த தலைவர் திரு.சுப்ரமணியன் சுவாமி விமர்சித்துள்ளார்.
பா.ஜ.க. மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.சுப்பிரமணியன்சுவாமியின் 80வது பிறந்தநாள் விழா மதுரை வர்த்தக மைய கட்டடத்தில் இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கதேவர் பெயரை சூட்ட இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். ஆகிய இருவரும் தடையாக இருப்பதாக கூறினார்.
இதனைத் தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழகத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களால் மாநிலத்தின் உரிமைகளை மீட்க முடியவில்லை எனத்தெரிவித்தார். அவர்கள் அனைவரும் வாய் மூடி பூனைக்குட்டிகள் போல் அடங்கிக் கிடப்பதாகவும் குறிப்பிட்டார்.