இந்திய தேர்தல் ஆணையத்தால் அ.ம.மு.க., முறைப்படி பதிவு : பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கழகத்தினர் கொண்டாட்டம்

Dec 8 2019 6:03PM
எழுத்தின் அளவு: அ + அ -

அ.ம.மு.க., பதிவு ‍செய்யப்பட்டதை அடுத்து, சென்னை உட்பட தமிழகம் முழுவதும் கழக நிர்வாகிகள் பட்டாசுகள் வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

கழக பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் மேற்கொண்ட தொடர் முயற்சிகள் காரணமாக, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தால், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், கழக நிர்வாகிகள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

தென்சென்னை தெற்கு மாவட்டம், மயிலாப்பூர் பகுதிக்‍ கழகச் செயலாளர் திரு.அர்ஜூனன் தலைமையில், மயிலாப்பூர் லஸ் பகுதியில் அமைந்துள்ள நவசக்தி விநாயகர் ஆலயத்தில் தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து, பட்டாசு வெடித்து பொதுமக்‍களுக்‍கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், தென்சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் விருகை திரு.T.S. கண்ணன், கழக அமைப்பு செயலாளர் திருவான்மியூர் திரு.S.முருகன், மாவட்ட இணைச் செயலாளர் திரு.N. குமரவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சென்னை வேளச்சேரி பகுதியில், தென்சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் விருகை திரு.T.S. கண்ணன், வியாபாரிகள் மற்றும் பேருந்து பயணிகளுக்‍கு இனிப்புகளை வழங்கினார். கழக அமைப்புச் செயலாளர் திரு. முருகன், வேளச்சேரி பகுதி கழகச் செயலாளர் திரு.சந்திரபோஸ், பகுதிக்‍ கழக இணைச் செயலாளர் திரு.செந்தூர் சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வடசென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் திரு.சந்தானகிருஷ்ணன் தலைமையில் சென்னை வேப்பேரியில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. கழக செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் திரு.அதிவீரராம பாண்டியன், வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் திரு.ராஜ்குமார் பாண்டியன், வர்த்தக பிரிவு இணை செயலாளர் திரு.சுரேஷ், வடசென்னை தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் திரு.நாசர், பகுதி கழக செயலாளர்கள் திரு.வெங்கடேஷன், திரு.பாண்டியன், திரு.லோகு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தென்சென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் திரு.வ.சுகுமார்பாபு தலைமையில் அண்ணா நகர், எம்.எம்.டி.ஏ காலனியில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. அண்ணா நகர் பகுதிச் செயலாளர் திரு.கே. என்.குணசேகரன், ஆயிரம் விளக்கு பகுதிச் செயலாளர் வழக்கறிஞர் திரு.வி.பாபு, சேப்பாக்கம் திருவல்லிக்கேணி பகுதிச் செயலாளர் திரு.ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சென்னை தியாகராய நகர் பகுதியில், 141-வது வட்டக்‍ கழகம் சார்பில் சி.ஐ.டி நகர், செங்கன்ணி அம்மன் ஆலயம் அருகில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கழகத்தினர் கொண்டாடினர். தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் திரு.வ.சுகுமார்பாபு, தியாகராய நகர் பகுதி செயலாளர் திரு.S.ஜெயராமன், வட்ட கழக செயலாளர் திரு.M.C பார்த்தசாரதி மற்றும் ஏராளமான கழக தொண்டர்கள், பெண்கள் கலந்துகொண்டனர்.

செங்கல்பட்டு வடக்கு மாவட்டம், ஆலந்தூர் பகுதிக்‍ கழகச் செயலாளர் திரு.லட்சுமிபதி தலைமையில் ஆலந்தூர் பகுதியில் உள்ள நந்தம்பாக்கத்தில் கழகத்தினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். செங்கல்பட்டு வடக்கு மாவட்டக்‍ கழகச் செயலாளர் திரு.மா.கரிகாலன், 158-வது வட்டக்‍ கழக செயலாளர் திரு.சுமோ பழனி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திரு. பொன்ராஜா தலைமையில், பொன்னேரியில், பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கழகத்தினர் உற்சாகமாக கொண்டாடினர். மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் திரு.பி.வி. சங்கர்ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருவள்ளூர் மத்திய மாவட்டக்‍ கழகம் சார்பில், திருவள்ளூர் பேருந்து நிலையம் அருகே, திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் திரு. டி. ஏழுமலை தலைமையில் பட்டாசுகள் வெடித்தும் பொதுமக்களுக்கும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது.

திருவள்ளூர் மத்திய மாவட்டக்‍ கழகம் சார்பில் மாதவரத்தை அடுத்த ரெட்டேரி, அம்பத்தூர் பேருந்து நிலையம், தொழிற்பேட்டை பேருந்து நிலையம், கொரட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் கழகக்‍ கொடியேற்றி, பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கழக நிர்வாகிகள் கொண்டாடி மகிழ்ந்தனர். திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக செயலாளர் திரு கே. ஏ. மலைமேகம், அம்பத்தூர் பகுதி கழக செயலாளர் திரு.கே.எஸ். வேதாசலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் கிழக்கு ஒன்றிய கழக அ.ம.மு.கவினர், ஸ்ரீபெரும்புதூர் கிழக்கு ஒன்றிய கழக துணை செயலாளர் செங்காடு திரு.எம். ராஜசேகர் ஏற்பாட்டின்பேரில், செங்காடு பேருந்து நிறுத்தம் அருகில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். ஸ்ரீபெரும்புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் மேவலூர் குப்பம் திரு.எம்.சக்திவேல், ஊராட்சி கழக செயலாளர் ஆர்.கோமதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தஞ்சை வடக்கு மாவட்டம், திருவிடைமருதூர் வடக்கு ஒன்றியக்‍ கழகம் சார்பில், திருவிடைமருதூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு.N.P.S. ராஜசேகர் தலைமையில் திருவிடைமருதூர் கடைத்தெருவில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் பேரூர் கழக செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

புதுச்சேரியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர், கழகச் செயலாளர் வழக்கறிஞர் திரு.வேல்முருகன் தலைமையில், கிழக்கு கடற்கரை சாலையில் சிவாஜி சிலை அருகில், பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். அவ்வழியாக பேருந்துகளில் வந்தவர்களுக்‍கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. கழக அமைப்பு செயலாளர் திரு. அருள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00