2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் ஆ.ராசா மீண்டும் சிறை செல்வார் - ப.சிதம்பரம் நல்லவர்போல் நடித்து மக்களை முட்டாளாக்கப் பார்க்கிறார் : சுப்பிரமணியன்சுவாமி
Dec 8 2019 6:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் ஆ.ராசா மீண்டும் சிறை செல்வார் என்றும், ப.சிதம்பரம் நல்லவர்போல் நடித்து மக்களை முட்டாளாக்கப் பார்க்கிறார் என்றும் திரு.சுப்பிரமணியன்சுவாமி தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க. மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.சுப்பிரமணியன்சுவாமியின் 80வது பிறந்தநாள் விழா மதுரை வர்த்தக மைய கட்டடத்தில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கதேவர் பெயரை சூட்ட இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். ஆகிய இருவரும் தடையாக இருப்பதாக கூறினார்.