மதுரையில் தொடர் மழையால் அழுகிய வெங்காய பயிர்கள் : இழப்பீடு வழங்க அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை

Dec 8 2019 5:38PM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரையில் தொடர் மழை காரணமாக பல ஏக்கர் கணக்கில் பயிரிடப்பட்ட வெங்காய பயிர்கள் அழுகி சேதமடைந்ததால், அவற்றை சாலையில் கொட்டும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியில் மல்லிகைப் பூவிற்கு அடுத்தபடியாக வெங்காய விவசாயம் நடைபெற்று வருகிறது. இப்பகுதி விவசாயிகள் பல ஆயிரம் ஏக்கரில் வெங்காயத்தை தங்களது தோட்டத்தில் விவசாயம் செய்து வருகிறார்கள். ஆனால் வடகிழக்கு பருவ மழையினாலும், நோய் தொற்றினாலும் இந்த ஆண்டு வெங்காய விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் விவசாயிகள், முழுமையாக அழுகிய நிலையில் உள்ள வெங்காயப் பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் குப்பைகளாக சாலைகளில் கொட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர். மேலும் அரசு தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கி வரும் காலங்களில் மீண்டும் வெங்காயம் பயிரிட உதவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00